இந்தோனேசியா: துறைமுகத்தில் தீ
இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள பெனாவ் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏராளமான படகுகள் எரிந்து நாசமாகின.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள பெனாவ் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏராளமான படகுகள் எரிந்து நாசமாகின.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த துறைமுகத்தில் இருந்த சுமார் 40 படகுகளில் மளமளவென்று தீப பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று பாலி காவல்துறை தெரிவித்துள்ளது.