முகப்பு
உலகம்

இந்தோனேசியா: துறைமுகத்தில் தீ

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள பெனாவ் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏராளமான படகுகள் எரிந்து நாசமாகின.

Updated On : 10 ஜூலை, 2018 at 1:04 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள பெனாவ் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏராளமான படகுகள் எரிந்து நாசமாகின.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த துறைமுகத்தில் இருந்த சுமார் 40 படகுகளில் மளமளவென்று தீப பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று பாலி காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.