உலகம்

இந்தியாவுக்கு பயங்கரவாதி, பாகிஸ்தானுக்கு வாக்காளர்: பாக்., பொதுத்தேர்தலில் வாக்களித்தார் ஹபீஸ் சயீத்

DIN

பாகிஸ்தானில் 11-ஆவது பொதுத் தேர்தல் புதன்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட லக்ஷ்ர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் வாக்களித்தார். 

இந்த தேர்தலில் ஹபீஸ் சயீத்தின் மகன், மருமகன் ஆகியோர் இந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். முன்னதாக, அவர்களுக்கு ஹபீஸ் சயீத் நேரடியாக பிரச்சாரம் செய்து சர்ச்சை ஏற்படுத்தியிருந்தார். இதற்கு அமெரிக்கா தரப்பில் இருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அவர் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்து சென்றுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. 

இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், 'ஹபீஸ் சயீத் ஒரு பயங்கரவாதி. இவரைப் போன்ற ஆட்களால் பாகிஸ்தானின் ஜனநாயகம் அபாயகரமான நிலையில் உள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT