உலகம்

சிரியா: ஐ.எஸ். தாக்குதலில் 8 ராணுவத்தினர் பலி

DIN

சிரியாவின் ஹமா மாகாணத்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 8 அரசுப் படையினர் உயிரிழந்தனர்.
 இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சனிக்கிழமை கூறியதாவது:
 சிரியாவில் கிளர்ச்சியாளர்களிடம் எஞ்சியுள்ள சொற்பமான பகுதிகளில் ஒன்றான ஹமா மாகாணத்தின் வடக்கே, அரசுப் படையிர் மீது ஐ.எஸ். தொடர்புடைய ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் பயங்கரவாத அமைப்பினர் வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையினர் 8 பேர் உயிரிழந்தனர்.
 ராணுவம் விலக்கப்பட்ட பகுதி அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT