உலகம்

சர்வதேச போலீஸான 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரைக் காணவில்லை: மனைவியின் புகாரால் பரபரப்பு 

சர்வதேச போலீஸ் என்று அழைக்கப்படும் 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

DIN

பாரிஸ்: சர்வதேச போலீஸ் என்று அழைக்கப்படும் 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சீனாவைச் சேர்ந்தவர் மெய்ங் ஹாங்வாய். சீனாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அத்துடன் சர்வதேச காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பு அமைப்பான 'இன்டர்போல்' அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். 

இன்டர்போல் அமைப்பின் தலைமையகமானது பிரான்ஸின் லியான் நகரில் அமைந்துள்ளது. அங்குதான் ஹாங்வாய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில்  மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அவரை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்துகாணவில்லை என்று மனைவி தற்போது புகார் கூறிய இருக்கிறார். 

முன்னதாக 'இன்டர்போல்' அமைப்பில் பணியாற்றிய பொழுதும் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் காணாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT