இந்தோனேசியாவைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
இந்தோனேசியாவை கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தா: இந்தோனேசியாவை கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான சுலவேசிப் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேப் பகுதியில் முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது. இதில் ஒருவர் பலியானார். 10 பேர் காயமடைந்தனர். 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.