உலகம்

இலங்கையில் அதிர்ச்சி: பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு

DIN


கொழும்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இலங்கையில் வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளைத் தேடும் பணியில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக மன்னார் ஓலைத் தொடுவாய் பகுதியில் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை செயலிழக்கச் செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் தலைநகர் கொழும்பு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன. இது அந்நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT