உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகள் 'திடீர்' கைது 

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப், நிதி மோசடி வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் லோக்பத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தனது தந்தை நவாஸ் ஷெரீப்பை காணச்செல்லும் வழியில், மரியம் நவாசை பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை முகமை (NAB) அதிகாரிகள் கைதுசெய்தனர். 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ள அதிகாரிகள், கைதுக்கு பின்னர் அவரை லாகூர் கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT