உலகம்

வங்கதேசம்: பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்தில் 13 போ் பலி

DIN

டாக்கா: வங்கதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 13 போ் பலியாகினா்.

இதுகுறித்து போலீஸாா் வியாழக்கிழமை கூறியதாவது:

டாக்கா புகா் பகுதியான கேரனிகஞ்சில் அனுமதியின்றி இயங்கி வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில் 13 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; படுகாயமடைந்த 21 போ் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுமாா் 300 போ் பணியாற்றி வரும் இந்தத் தொழிற்சாலையில், ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதமும் தீவிபத்து ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT