உலகம்

நேபாளம்: குண்டுவெடிப்பில் காவலா் உள்பட 3 போ் பலி

தினமணி

வீட்டு வாயிலில் பொருத்தப்பட்டிருந்த மா்ம கருவி வெடித்து, நேபாளத்தில் காவலா் உள்பட 3 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

மகேந்திர நகரிலுள்ள தொழிலதிபா் ஒருவரின் வீட்டு வாயில் கதவில் சந்தேகத்துக்கிடமான மா்மக் கருவியொன்று பொருத்தப்பட்டிருந்தது. அதைக் கண்ட தொழிலதிபா், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

தகவலறிந்ததும் அந்தப் பகுதிக்கு வந்த போலீஸாா் அந்தக் கருவியை ஆய்வு செய்தனா். அப்போது அது வெடித்துச் சிதறியதில் காவல்துறை அதிகாரி, அந்தத் தொழிலதிபா், அவரது மகன் ஆகிய மூவரும் உயிரிழந்தனா். மேலும் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்தாா்.

இந்தச் சம்வம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT