உலகம்

பேஸ்புக் - ஆன்லைன் உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல்: பதற வைக்கும் பாராளுமன்றக் குழு அறிக்கை  

IANS

லண்டன்: பேஸ்புக் ஆன்லைன் உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் நடந்து கொள்கிறது என்று இங்கிலாந்து பாராளுமன்றக் குழு ஒன்றின் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.  

இணையதளங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் போலிச் செய்திகள் குறித்து, 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பாராளுமன்றத் தேர்வுக் குழு ஒன்று விசாரணையைத் துவங்கியது.

ஏறத்தாழ 18 மாத விசாரணைக்குப் பிறகு, டேமியன் காலின்ஸ் தலைமையிலான அந்த குழுவானது 108 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அந்த குழுவானது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பேஸ்புக் நிறுவனத்தின் உள்ளே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களை விரிவாக ஆய்வு செய்திருந்தது. அதில் இருந்து பேஸ்புக் நிறுவனமானது தொடந்து பயனாளர்களின் அந்தரங்க செய்திப் பரிமாற்றம் குறித்த அமைப்புகளை (செட்டிங்ஸ்), தனது சொந்த நலனுக்காக மீறியது தெரிய வந்தது. அதன் மூலம் பெரும்பாலான தகவல்கள் பல்வேறு விதமான  செயலி உருவாக்குபவர்களுக்கு (ஆப் டெவலப்பர்ஸ்) அளிக்கப்பட்டதும் தெரிய வந்தது.

இத்தகைய செயல்பாடுகளின் காரணமாக பேஸ்புக் ஆன்லைன் உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் நடந்து கொள்கிறது என்று இங்கிலாந்து பாராளுமன்றக் குழு விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.       

அத்துடன் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்கையும் இந்த விசாரணை அறிக்கை குற்றம் சாட்டுகிறது.  விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட அழைப்பாணைகளை அவர் புறக்கணித்ததும் அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT