உலகம்

சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு: 24 பேர் பலி 

DIN

இட்லிப்: சிரியாவில் திங்களன்று நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது இட்லிப் மாகாணம். அரசுக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சி படையினர் வலிமையாக உள்ள கடைசிப் பகுதியாகும். எனவே இங்கு அதிபர் அல்  பஷார் அரசுப் படைகள் மூலம் குண்டுகள் வீசுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் திங்களன்று அங்கு நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் திங்கள் மாலை முதல் குண்டுவெடித்தது. வாகனம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடிக்கச் செய்யபட்டது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்  உள்ளிட்ட மீட்பு படைகள் வந்து சேர்ந்த தருணத்தில் இரண்டாவது குண்டும் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT