உலகம்

சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு: 24 பேர் பலி 

சிரியாவில் திங்களன்று நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

DIN

இட்லிப்: சிரியாவில் திங்களன்று நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது இட்லிப் மாகாணம். அரசுக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சி படையினர் வலிமையாக உள்ள கடைசிப் பகுதியாகும். எனவே இங்கு அதிபர் அல்  பஷார் அரசுப் படைகள் மூலம் குண்டுகள் வீசுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் திங்களன்று அங்கு நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் திங்கள் மாலை முதல் குண்டுவெடித்தது. வாகனம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடிக்கச் செய்யபட்டது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்  உள்ளிட்ட மீட்பு படைகள் வந்து சேர்ந்த தருணத்தில் இரண்டாவது குண்டும் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT