உலகம்

வங்கதேச முன்னாள் அதிபர் அர்ஷத் மரணம்

DIN

வங்கேதச முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஹுசைன் முகமது அர்ஷத் (91), உடல் நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
 ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து கடந்த 1982-ஆம் ஆண்டில் ராணுவப் புரட்சியின் மூலம் அவர் ஆட்சியைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து, 1986-ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து அதிபராகப் பொறுப்பேற்றார்.
 எனினும், மக்கள் போராட்டம் காரணமாக 8 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு அவர் விலகினார்.
 சர்வாதிகார ஆட்சி நடத்தியிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் முகமது அர்ஷத் மென்மையான சுபாவம் கொண்டவர் எனவும், கவிதைகள் புனைவதில் அவர் வல்லவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT