உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோல் 6.8 ஆக பதிவு

DIN


ஜப்பான் நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இதையடுத்து, சுமார் ஒரு அடி வரை கடல் அலை எழும்பும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

நிலநடுக்கத்தை தொடர்ந்து, அந்த பகுதிகளில் புல்லட் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு ஜூன் மாதம் ஒசாகா பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 350 பேர் வரை காயமடைந்தனர். 2011, மார்ச் 11-ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 9.0 ஆக பதிவானது. இதன் விளைவாக சுனாமி ஏற்பட்டு, அது மிகப் பெரிய சேதத்தை உண்டாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT