உலகம்

நியூசிலாந்தில் மசூதி அருகே துப்பாக்கிச் சூடு

DIN

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே உள்ள மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி அருகே மர்மநபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மர்ம நபர்கள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்திருக்கலாம், காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இதையடுத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடந்துகொண்டிருந்தபோது, அந்த பகுதியை விரைந்து வந்த போலீஸார் சுற்றி வளைத்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் உள்ளூர் செய்திகள் உறுதி செய்துள்ளது. 

இந்நிலையில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT