உலகம்

தாய்லாந்து: 2-ஆவது நாளாக மன்னர் முடிசூட்டு விழா

DIN

தாய்லாந்து மன்னர் வஜ்ராலங்கரணுக்கு முடிசூட்டும் விழா, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சனிக்கிழமை தொடங்கிய இந்த விழாவில் தாய்லாந்தின் 10-ஆவது மன்னராக முடிசூட்டப்பட்ட வஜ்ராலங்கரண், பாங்காக் வீதிகள் வழியாக ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் சென்றார்.
 கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் மன்னரது ஊர்வலத்தைக் காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வீதிகளில் காத்திருந்தனர்.
 சக்ரி வம்சத்தின் 9-ஆவது மன்னராக பூமிபல அதுல்யதேஜ் முடிசூட்டிக்கொண்ட 69 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் முதல்முறையாக மன்னர் முடிசூட்டு விழா நடைபெறுவதால், அதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT