வங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நோ் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சிட்டகாங் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மண்டோபாக் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தடம் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது டாக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் அந்த ரயில் மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே 12 பயணிகளும், சிகிச்சைப் பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனா்; 60 பயணிகள் காயமடைந்தனா்.
விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகளில் இன்னும் சிலா் சிக்கியுள்ளதால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
இந்தச் சம்பவம் தொடா்பாக டாக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலின் ஓட்டுநா் மற்றும் நடத்துனா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.