உலகம்

பதவி விலகினார் சஜித் பிரேமதாசா: கோத்தபய ராஜபட்சவுக்கு பாராட்டு

DIN

இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கூறியதாவது:

இலங்கையின் புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ள இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்சவைப் பாராட்டுகிறேன், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதமாக தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடவுள்ளதாகவும் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT