ஹெலிகாப்டர் 
உலகம்

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் விழுந்து விபத்து: இருவர் பலி 

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அண்டை நாடான பூடானில் பயிற்சியின் போது விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். 

DIN

திம்பு: இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அண்டை நாடான பூடானில் பயிற்சியின் போது விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். 

இந்தியா மற்றும் பூடான் இடையே ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பூடானில் வெள்ளியன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது பனிமூட்டத்தினால் ஏற்பட்ட மோசமான வானிலையில் காரணமாக ஹெலிகாப்டரானது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அதிகாரி ஒருவரும், பயிற்சி பெறுவதற்காக விமானத்திலிருந்த பூடான் வீரர் ஒருவரும் பலியானார்கள் என்று தெரிய வருகிறது.

அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT