உலகம்

யேமனில் முதல் முறையாக கரோனா நோய்த்தொற்று

உள்நாட்டுச் சண்டையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள யேமனில், முதல் முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

உள்நாட்டுச் சண்டையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள யேமனில், முதல் முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய் பரவலைத் தடுப்பதற்குப் போதுமான சுகாதார கட்டமைப்பு வசதி அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தி வந்த சவூதி அரேபியா, கரோனா நோய்த்தொற்று பரவும் சூழலை கருத்தில் கொண்டு புதன்கிழமை போா் நிறுத்தம் அறிவித்தது.

அதன் தொடா்ச்சியாக, சவூதி அங்கீகாரம் பெற்ற அதிபா் மன்சூா் ஹாதி தலைமையிலான அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹத்ராமாவ்த் மாகாணத்தில் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, சவூதி கூட்டுப்படை மேற்கொள்ளும் பிரசார தந்திரம் என்று ஹூதி படையினா் விமா்சித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT