கரோனா: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் பலி
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 409 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 409 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 22,771 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,494,009 -ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 409 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 26,049-ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் ஃபைசர் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி டிசம்பர் 27 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.