சீனாவில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று
சீனாவில் இன்று மேலும் 22 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன என்று சீன சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சீனாவில் இன்று மேலும் 22 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன என்று சீன சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சின்ஜியாங் உய்குர் ஆகிய மாகாணங்களில் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தேசிய சுகாதார ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து சீனாவில் மொத்த பாதிப்பு 83,644 ஆக உள்ளது. நோய்த் தொற்றுக்கு 4,634 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், 78,758 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
உலகளவில், கரோனா வைரஸ் தொற்று 14,049,207 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 6,01,494 ஆகவும் உயர்ந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.