ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு உயர் நிலை காணொலிக் கூட்டம் 18ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் எழுத்து மூல உரை நிகழ்த்தினார்.
புதிய ரக காரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், பொருளாதார மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை மீட்டெடுக்கப் பன்னாடுகள் பாடுபட்டு வருகின்றன.
மனித குலம், பொது தலைவிதியைக் கொண்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புப் பாதையில் பயணித்து, பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்க வேண்டும் என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்