உலகம்

ரஷியாவில் புதிதாக 7,889 பேருக்கு கரோனா: 32 சதவிகிதத்தினருக்கு அறிகுறி இல்லை

DIN


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக ரஷியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 7,889 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,579 (32.7 சதவிகிதத்தினர்) பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,76,952 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 161 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. இதுவே நேற்று 181 பேர் பலியாகியிருந்தனர்.

அதேசமயம், 10,186 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று 10,443 பேர் குணமடைந்திருந்தனர். இதுவரை மொத்தம் 3,34,592 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT