உலகம்

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 5,04,466-ஐ எட்டியது

DIN


உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,04,466 ஆக உயர்ந்துள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை வதைத்து வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 29-ம் தேதி நிலவரப்படி 1 கோடியை தாண்டியுள்ளது.  

உலகளவில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,0249,470 ஆக உயர்ந்துள்ளது. மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5,04,466 ஆக உள்ளது. மேலும் 57 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 

அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,6,37,077 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,28,437 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 13,45,254 பேருக்கு கரோனா பாதித்து, 57 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 

ரஷ்யாவில் 6,34,437 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் 5,49,437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 16,487 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT