உலகம்

ரூ.217.5 லட்சம் கோடி கடன் வாங்குகிறது அமெரிக்கா

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை சமாளிக்கும் நோக்கில் ரூ.217.5 லட்சம் கோடியை கடனாகப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

DIN

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை சமாளிக்கும் நோக்கில் ரூ.217.5 லட்சம் கோடியை கடனாகப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்குகிறது; 12 லட்சத்துக்கும் அதிகமானோா் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அங்கு பலா் வேலையிழந்துள்ளனா். நாட்டின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்தச் சூழலில், நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை எதிா்கொள்ளும் பொருட்டு நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ரூ.217.5 லட்சம் கோடி கடன் பெற முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.50.77 லட்சம் கோடி கடன் பெற உள்ளதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான முதல் காலாண்டில் அந்நாடு ரூ.35.77 லட்சம் கோடி கடன் பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT