உலகம்

கொவைட்-19 விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசியல்வாதிகள்

உண்மை, சட்டம், சர்வதேச வழக்கம் போன்ற எந்த ஆதாரமும் இல்லாமல், தவறான முறையில் குற்றம் சுமத்துவதை

DIN

உண்மை, சட்டம், சர்வதேச வழக்கம் போன்ற எந்த ஆதாரமும் இல்லாமல், தவறான முறையில் குற்றம் சுமத்துவதை சீனா எதிர்ப்பதாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்தார்.  ஆனால், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி தோல்வியால் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாட்டு அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

தற்போது, பன்னாட்டு மருத்துவத் துறை மற்றும் அறிவியல் துறை ஆகியவை, கொவைட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸ் எவ்வாறு தோன்றியது குறித்து முடிவு செய்யவில்லை. அதேசமயம், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், கடந்த ஆண்டு நவம்பர் திங்கள் அல்லது இதற்கு முந்தைய காலத்தில் கொவைட்-19 தொற்று ஏற்பட்டது. அந்த நோயாளிகள், வெளிநாட்டில் பயணம் மேற்கொள்ளவில்லை. சந்தேகத்துக்குள்ளான அமெரிக்கா, பல துறைகளில் கொவைட்-19 விவகாரத்தில்  தகவல்களைத் தெளிவுபடுத்தவில்லை.

உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள ஃபோர்ட் டெட்ரிக் என்ற அமெரிக்க ஆய்வகத்தின் உண்மை நிலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அமெரிக்க அரசியல்வாதிகள் மறைந்திருப்பது என்ன? இந்த விவகாரங்களில், சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டாமா?

2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கிய எச்1என்1 ரக காய்ச்சல், உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால், உலகளவில் மாபெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதுவரை, எந்த நாடோ அல்லது அமைப்போ, அமெரிக்கா மீது குற்றம் சுமத்தி இழப்பீடு கோரவில்லை. இதனால், சீனா மீது வழக்கு தொடுத்து வருவதாக சொல்லும் அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர், இரட்டை நிலைப்பாட்டையும் ஆதிக்கத்தையும் மீண்டும் வெளிக்காட்டுகின்றனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT