ஈரானில் புதிய உச்சம்: ஒரேநாளில் 10,463 பேருக்கு கரோனா
ஈரானில் புதிய உச்சமாக ஒரேநாளில் புதிதாக 10,463 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் புதிய உச்சமாக ஒரேநாளில் புதிதாக 10,463 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,92,949 ஆக உயர்ந்துள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களைச் சந்தித்த ஈரான் சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 3,574 பேருக்கு மருத்துவமனை உதவி தேவைப்படுகிறது என்றார்.
Advertisement
ஞாயிறு மற்றும் திங்கள் இடையே மேலும் 458 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 38,749 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
திங்கள்கிழமை நிலவரப்படி, 5,25,641 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கின்றனர்.