முகப்பு
உலகம்

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; ஒரே நாளில் புதிதாக 1,42,755 பேருக்கு தொற்று 

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,42,755 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 12 நவம்பர், 2020 at 7:41 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:21 PM

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,42,755 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், பீதியையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 1,42,755 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,431 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

அமெரிக்காவை பொறுத்தவரை இதுவரை 1,04,73,900 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2,41,600 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.