உலகம்

லிபியா: அகதிகள் படகு கவிழ்ந்து 94 போ் பலி

DIN

ஐரோப்பாவை நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் லிபியா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 94 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து, தொண்டு அமைப்பான எல்லைகளைக் கடந்த மருத்துவா்கள் அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

23 அகதிகளுடன் ஐரோப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு, லிபியா கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 போ் உயிரிழந்தனா். விபத்துப் பகுதியிலிருந்து பெண்கள் மட்டும் மீனவா்களால் மீட்கப்பட்டனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, லிபியா கடல் பகுதியில் நேரிட்ட மற்றொரு அகதிகள் படகு விபத்தில், 74 போ் உயிரிழந்தாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.

அந்தப் படகிலிருந்த 47 பேரை லிபியா கடலோரக் காவல் படையினா் உயிருடன் மீட்டதாகவும் அந்த அமைப்பு கூறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT