ரஷியாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 22,778 பேருக்கு கரோனா
ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 22,778 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 22,778 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 22,572 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய (திங்கள்கிழமை) பாதிப்பு எண்ணிக்கை கூடியுள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை 22,702 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதே ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையின் உச்சமாக இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 22,778 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,48,603 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,640 பேருக்கு (24.8 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.
Advertisement
நேற்று 352 பேர் நோய்த் தொற்றால் பலியான நிலையில், இன்று 303 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 33,489 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 13,864 பேர் நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். நேற்றைய தினத்தைக் காட்டிலும் (14,456) இது குறைவான எண்ணிக்கை. இதுவரை மொத்தம் 14,53,849 பேர் குணமடைந்துள்ளனர்.