உலகம்

டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகனுக்கு கரோனா

PTI


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அது முதல் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே.. ஜோ பைடன் 78!

42 வயதாகும் டிரம்ப் ஜூனியருக்கு கரோனா அறிகுறி எதுவும் காணப்படவில்லை. அதே வேளையில் மருத்துவர்களின் அறிவுரைகளை முழுமையாகக் கடைபிடித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கு முன்பாக, டிரம்ப், அவரது மனைவி மெலானியா மற்றும் அவர்களது 14 வயது மகன் பாரோனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாள்கள் சிகிச்சையும் பெற்றனர். இந்த நிலையில், டிரம்ப்பின் முதல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தனது தந்தைக்காக டிரம்ப் ஜூனியர் சூறாவளி சுற்றுப் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT