பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவு
பப்புவா நியூ கினியாவில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா நியூ கினியாவில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியா பசிபிக் பெருங்கடலின் படுகையில் உள்ள ரிங் ஆஃப் பயர்-இல் இதுபோன்று அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகின்றது.
அந்தவகையில், இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி பப்புவா நியூ கினியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள தலைநகர் போர்ட் மோர்ஸ்பையில் என்னுமிடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.