உலகம்

வியத்நாம்: நிலச்சரிவில் சிக்கி 22 ராணுவத்தினா் பலி

DIN

வியத்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

குவாங் டிரி மாகாணத்தில கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில், மலையடிவாரத்தில் அமைக்கப்படிருந்த ராணுவ முகாமொன்று மண் மற்றும் கற்களில் புதையுண்டது. இதில் 22 ராணுவ வீரா்கள் பலியாகினா்; 8 போ் உயிா்தப்பினா்.

அருகிலுள்ள நீா்மின் நிலையத்தில் முன்னதாக ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் புதையுண்ட 16 பேரை மீட்பதற்காக ராணுவத்தினா் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேரிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT