முகப்பு
உலகம்

இத்தாலி முன்னாள் பிரதமரை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கரோனா

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு கரோனா
பகிர்:

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி நேற்று (வியாழக்கிழமை) கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 83 வயதான அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

எனினும் பெர்லுஸ்கோனியின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், 
மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் இருக்கும் வலதுசாரி கட்சியான ப்ரோசா இத்தாலியா கட்சி தெரிவித்துள்ளது. 

எனினும், தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் பிரச்சாரப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை அளிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பெர்லுஸ்கோனியின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.