உலகம்

அமெரிக்காவில் மேலும் 51,399 பேருக்கு தொற்று உறுதி; ஒரேநாளில் 646 பேர் உயிரிழப்பு

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,399 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. மேலும், 646 பேர் உயிரிழந்தனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 65,53,303 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,94,489 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து சுமார் 39 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51,399 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 646 பேர் உயிரிழந்தனர். 

அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் 7,57,778 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் 663,445, புளோரிடாவில்  6,61,160 பேரும், நியூயார்க்கில் 4,44,948 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மொத்த பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி 50 லட்சத்தையும், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி 60 லட்சத்தையும், செப்டம்பர் 14 ஆம் தேதி 65 லட்சத்தையும் கடந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT