உலகம்

பிரிட்டன் தடைப் பட்டியலில் மேலும் 4 நாடுகள்

DIN


லண்டன்: புது வகை கரோனாக்கள் பரவி வருவதால் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக, மேலும் 4 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதுவகை கரோனாக்கள் பரவுவதைத் தடுப்பதற்காக 35 நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பட்டியலில் வங்கதேசம், கென்யா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளும் சோ்க்கப்பட்டுள்ளன. வரும் 9-ஆம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 43,50,266 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,26,764 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT