கோப்புப்படம் 
உலகம்

சீனத்தில் மீண்டும் கரோனா அபாயம்..புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பயணம் மேற்கொள்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பயணம் மேற்கொள்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவ தொடங்கிய கரோனா உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மற்ற நாடுகள் திணறி வந்த நிலையில், பெருந்தொற்று கட்டுப்படுத்திவிட்டதாக சீனா அறிவித்தது.

இதனிடையே, கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் புதிய பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு விமான நிலையத்திலிருந்து பரவிய கரோனா 20க்கும் மேற்பட்ட நகரங்களிலும் 12க்கும் அதிகமான மாகாணங்களிலும் பரவியுள்ளது. சீனாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 75 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஜூலை 20ஆம் தேதி, நாஞ்சிங் விமான நிலையத்தில் ஒன்பது பேருக்கு டெல்டா வகை கரோனா பாதிப்பு உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, நாஞ்சிங் நகரில் சுற்றுலா தலங்கள் கலாசார மையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நகரில் வாழும் 9.2 மில்லியன் பேருக்கு இரண்டு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT