உலகம்

நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

DIN

நிகோபார் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 
நிகோபார் தீவுகளில் இன்று பிற்பகல் 1.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் சுமார் 150 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. 
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. முன்னதாக நேற்று அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்பெல் பே பகுதியில் 5.6 அலகு நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT