கியூபா - கரோனாவால் 4,000 பேர் பலி 
உலகம்

கியூபா - கரோனாவால் 4,000 பேர் பலி

கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு நாடுகளும் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள் 

DIN

கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு நாடுகளும் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் கியூபாவில் இதுவரை கரோனா தொற்றுக்கு 4,024 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மேலும் புதிதாக 8,636 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் இறந்திருக்கிறார்கள்.

தொற்று குறித்து பேசிய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ டூரான் , ' அதிவேகமாக தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் தொற்றுப் பரவலை குறைத்து வருகிறோம். கூடிய விரைவில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவோம்' எனத் தெரிவித்திருக்கிறார்.

தலைநகர் ஹவானாவில் புதிதாக 1,071 பேருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  

கியூபாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனாவால் 5,00,624 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT