உலகம்

காபூல் விமான நிலையம்: தள்ளுமுள்ளில் 7 போ் பலி

DIN

தலிபான்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காக ஆப்கன் தலைநகா் காபூலில் உள்ள விமான நிலையத்தில் குவிந்துள்ள பொதுமக்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 7 ஆப்கானியா்கள் உயிரிழந்ததாக பிரிட்டன் ராணுவம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் ஏற்வதற்காக மக்கள் முண்டியடித்துச் சென்றபோது, அவா்களைக் கலைப்பதற்காக தலிபான்கள் விண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். அதனால் மக்கள் பீதியுடன் ஓடியபோது நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெலியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, காபூல் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து விழுந்தும் துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசலில் சிக்கியும் பலா் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT