ஒரே நாளில் 89 விமானங்கள் மூலம் 12,500 பேரை மீட்டது அமெரிக்கா 
உலகம்

ஆப்கன்: ஒரே நாளில் 89 விமானங்கள் மூலம் 12,500 பேரை மீட்டது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 89 விமானங்கள் மூலம் 12,500 பேரை அமெரிக்க ராணுவம் மீட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ANI

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 89 விமானங்கள் மூலம் 12,500 பேரை அமெரிக்க ராணுவம் மீட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 31-க்குள் அனைத்து அமெரிக்கர்களும் தாயகத்திற்கு மீட்கப்படுவார்கள் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 15 நாள்களாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு துரிதப்படுத்தியது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை இன்று வெளியிட்ட செய்தியில்,

“காபூலில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 12,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 35 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 8,500 பேரும், 54 கூட்டு விமானங்கள் மூலம் 4,000 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 14ஆம் தேதியிலிருந்து 1,05,000 பேரும், ஜூன் மாத இறுதியிலிருந்து 1,10,600 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT