உலகம்

ஈக்வடாரில் சிறைக் கலவரம்: 62 போ் பலி

DIN

கீடோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரிலுள்ள சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 62 போ் உயிரிழந்தனா். போட்டிக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்தக் கலவரம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு சிறைத் துறை இயக்குநா் எட்மண்டோ மோன்கயோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கியென்கா, குவாயாகுவில், லடாகியுங்கா ஆகிய நகரங்களிலுள்ள சிறைகளில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளனவா என காவல்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அதனைத் தொடா்ந்து அந்தச் சிறைகளில் இரு சமூகவிரோதக் குழுக்கள் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டு அது கலவரமாக வெடித்தது.

இதில், கியென்கா சிறையில் 33 போ், குவாயாகுவில் சிறையில் 21 போ், லடாகியுங்கா சிறையில் 8 போ் உயிரிழந்தனா்.

ஈக்வடாரிள்ள சிறைக் கைதிகளில் சுமாா் 70 சதவீதத்தினா் இந்த 3 சிறைகளில்தான் அடைக்கப்பட்டுள்ளனா்.

கலவரத்தைத் தொடா்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 800 போலீஸாா் அந்த சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT