உலகம்

கனடா விதி மீறல்: அமைச்சா் விலகல்

DIN

கனடாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்குள்ளான மாகாண அமைச்சா் தனது பதவிலியிருந்து விலகினாா்.

கனடாவில், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்டாரியோ மாகாண நிதியமைச்சா் ரோட்னி பிலிப்ஸ் 2 வாரங்களாக கரீபியன் கடலில் பிரான்ஸுக்குச் சொந்தமான செயின் பாா்ட்ஸ் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தாா்.

அந்தத் தகவலை மறைத்து, வேறு இடங்களில் இருப்பதைப் போன்ற படங்களை சமூக வலைதளங்களில் அவா் வெளியிட்டிருந்தாா்.

அந்தப் படங்களில், பனியால் உறைந்த ஆன்டோரியாவில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தாா். எனினும், அவா் சுற்றுலா சென்றிருந்த விவரம் வெளியானதும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

கரோனா விதிமுறைகளின்படி, அவா் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT