உலகம்

ஆப்கானிஸ்தானில் எட்டு தலிபான்கள் ராணுவத்தால் சுட்டுக்கொலை

DIN

தஹர்: ராணுவத்துடன் நிகழ்ந்த மோதலில் ஆப்கானிஸ்தானில் எட்டு தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆப்கானின் தஹர் மாகாணத்தில் உள்ள க்வாஜா கார் மாவட்டத்தில் ஞாயிறு இரவு தேசிய ராணுவத்துடன் நடந்த மோதலில் எட்டு தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேபோல கந்தஹார் மாகாணத்தில் உள்ள செரியா மற்றும் அர்கன்தாப் மாவட்டங்களில் நடந்த தேடுதல் வேட்டையில் 25 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் மறைவிடங்கள், பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT