உலகம்

பிரேஸில்: கரோனா பலி புதிய உச்சம்

DIN

பிரேஸிலியா: பிரேஸிலில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,726 போ் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா். இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.

இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,57,562-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதன்கிழமை நிலவரப்படி, பிரேஸிலில் 1,06,47,845பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,27,173 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 8,63,110 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 8,318 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT