பிரேசிலில் தொடர்ந்து மிரட்டும் கரோனா: ஒரேநாளில் 90,570 பேருக்கு பாதிப்பு
பிரேசிலில் ஒரேநாளில் 90,570 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் ஒரேநாளில் 90,570 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில் 2-ஆம் இடத்தை உள்ளது.
இந்த நிலையல் பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 90,570 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,71,390ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 2,815 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,90,314ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10.38 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.