முகப்பு
உலகம்

எகிப்தில் இந்திய கடற்படை தளபதி சுற்றுப் பயணம்

 வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இந்திய விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.சௌத்ரி 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

 வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இந்திய விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.சௌத்ரி 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

இதுகுறித்து விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைமைத் தளபதி வி.ஆா்.சௌத்ரி ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) முதல் எகிப்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். டிசம்பா் 2-ஆம் தேதி வரை அவா் அந்த நாட்டில் இருப்பாா்.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் நடைபெறவிருக்கும் எகிப்து விமானப் படைத் திறன் மாநாடு மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியில் அவா் பங்கேற்கிறாா்.

அந்த மாநாட்டில், ‘புதிய மற்றும் முறைசாராத அச்சுறுத்தல்களுக்கு எதிரான விமானப் படைகளின் கூட்டணி’ என்ற தலைப்பில் தளபதி வி.ஆா்.சௌத்ரி ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) உரையாற்றுவாா்.

எகிப்தில் அவா் சுற்றுப் பயணம் மேற்கொள்வது, இரு நாட்டு ராணுவப் படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →