ஜப்பானில் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஃபுமியோ கிஷிடாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு உரையாடினார்.
ஜப்பான் பிரதமராக ஃபுமியோ கிஷிடா நாடாளுமன்றத்தால் முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறினார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஜப்பான் நாட்டின் பிரதமராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஃபுமியோ கிஷிடாவுக்கு வாழ்த்துகள். இந்தோ - ஜப்பான் உறவை வலுப்படுத்தும் வகையில் அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிரோக்கியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.