இலங்கை பிரதமுருடன் இந்திய ராணுவத் தளபதி சந்திப்பு
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சவுடன் இந்திய ராணுவத் தலைமை தளபதி எம்.எம்.நரவணே வியாழக்கிழமை சந்தித்தார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சவுடன் இந்திய ராணுவத் தலைமை தளபதி எம்.எம்.நரவணே வியாழக்கிழமை சந்தித்தார்.
அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இலங்கை சென்று அந்நாட்டு முக்கியத் தலைவா்களைச் சந்தித்தாா். இருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் அந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.
இதனைத்தொடா்ந்து இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 4 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இலங்கைச் சென்றாா்.
இந்நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சவை இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.