முகப்பு
உலகம்

காபூல் விரைந்தாா் பாகிஸ்தான் உளவுத் துறை தலைவா்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் இயக்குநா் ஃபைஸ் ஹமீது காபூல் நகருக்கு விரைந்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
காபூலில் ஃபைஸ் ஹமீது
பகிர்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் இயக்குநா் ஃபைஸ் ஹமீது காபூல் நகருக்கு விரைந்துள்ளாா்.

அவருடன், பாகிஸ்தான் அதிகாரிகளின் குழு ஒன்றும் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளது. புதிய அரசு அமைப்பது தொடா்பாக தலிபான்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக அந்தக் குழு காபூல் விரைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களைப் பற்றி தலிபான்களுடன் அந்தக் குழு பேச்சுவாா்த்தை நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஆப்கானிஸ்தானின் புதிய அரசில் தங்களது ஆதரவு பெற்ற ஹக்கானி அமைப்புக்கு அதிக அதிகாரம் பெற்றுத் தருவதற்காக காபூலுக்கு ஃபைஸ் ஹமீது விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.